புது ஸ்டைலில் ஆண்களிடம் குழந்தைகளை கொடுத்து பேருந்தில் திருட்டு – 2 பெண்கள் கைது!
திருப்பூர்: திருப்பூர் பேருந்தில் ஆண்களிடம் குழந்தைகளைக் கொடுத்து பயணிகளிடம் பணம் மற்றும் நகைகளைத் திருடிய இரண்டு பெண்கள் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களில் திருப்பூரில் மாநகர் புறநகர் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் நகைகள், பணம் திருடு போகும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வந்தன.
இதையடுத்து, நகரப்பேருந்துகளிலும், புறநகர் பேருந்துகளிலும் போலீசார் சாதாரண உடைகளில் பயணம் செய்தபடி கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இரண்டு பெண்கள்:
இந்நிலையில் திருப்பூர் புஷ்பா திரையரங்கம் பகுதியில் திங்கள்கிழமை கைக்குழந்தையுடன் நகரப் பேருந்தில் ஏறிய இரண்டு பெண்கள் உட்காந்திருந்த ஒரு பயணியிடம் குழந்தையை கொடுத்து அவர் கவனத்தை திசை திருப்பினர்.
போலீசார் கைது:
பின்னர், அவர் வைத்திருந்த பையில் இருந்து பணத்தை திருட முயன்றபோது அந்த பெண்கள் இருவரையும் போலீஸார் கையும் களவுமாக பிடித்தனர்.
மதுரையைச் சேர்ந்தவர்கள்:
பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் மதுரை மாவட்டம், வண்டிப்பே ட்டையை சேர்ந்த அருணா, கெளசல்யா எனத் தெரியவந்தது.
பேருந்தில் திருட்டு வேலை:
அவர்கள் கடந்த சில மாதங்களாக திருப்பூரில் தங்கி, பேருந்துகளில் பயணிகளிடம் நகைகள், பணத்தை திருடி வந்ததாக விசாரணையில் கூறியுள்ளனர்.
10 லட்சம் கொள்ளை:
இவர்கள் இருவரும் இதுவரை பேருந்துகளில் பயணித்து பயணிகளிடம் இருந்து மொத்தம் ரூபாய் 10 லட்சம் ரொக்கம் மற்றும் 30 பவுன் நகைகளை திருடியுள்ளனர்.
கொள்ளை பற்றி விசாரணை:
போலீசார் அந்த இரு பெண்களையும் கைது செய்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.