தவறான தகவலைச் சொன்ன கனிமொழி....!
தென்காசி: தென்காசியில் புதியதமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை ஆதரித்து நேற்று மாலை கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டபோது தவறான தகவலைச் சொன்னதால் எதிர்க்கட்சியினர் விமர்சனத்துக்குள்ளானார்.
கனிமொழி பேசுகையில, தென்காசியில் திமுக ஆட்சியில் ரூபாய் 27கோடி செலவில் தென்காசியில் நிலவும் கடும் போக்குவரத்தை கருத்தில் கொண்டு புறவழி சாலையும்,ஒருங்கிணைந்த நீதிமன்றமும் அமைக்கப்பட்டதாக பேசினார்.
இந்த இரண்டும் இன்னும் அமைக்கப்படாமல் கனவாகவே இருக்கும் நிலையில் இவைகளை திமுக ஆட்சியில் செயல் படுத்தப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதாக தவறான தகவலை கனிமொழி பேசியது அங்கு திரண்டிருந்த திமுக கூட்டணி யினரை அதிர்ச்சியடைய செய்தது.
வரலாற்று தகவல்களை ஆதாரத்தோடு சொல்லும் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி தவறான தகவலை சொன்னது மாற்று அணியினரின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.