For Daily Alerts
Just In
ஆர்.எஸ்.எஸ். - கார்ப்பரேட்.. மோடி ஆட்சியின் இரு தூண்கள்.. சிபிஎம் விளாசல்!
தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிலையம் அருகே கம்யூனிஸ்ட் கட்சிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் வாசுகி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைசெயலாளர் அழகுமுத்துபாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
அப்போது வாசுகி செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்தியில் 100 தினங்களை கடந்த மோடி ஆட்சியில் விலைவாசி ஏற்றம் கண்டுள்ளது. இது வேதனையை அளிக்கிறது.
மோடி ஆட்சியின் இருதூண்களாக ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் கார்ப்போரேட் நிறுவனங்களும் செயல்பட்டு வருகிந்றன.
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க முடியாத அரசாக தமிழக அரசு செயல்படுகிறது என்றார் வாசுகி.
Comments
English summary
CPM leader Vasuki slammed Modi led BJP govt for price rise in the nation
Story first published: Tuesday, September 2, 2014, 15:32 [IST]