For Daily Alerts
Just In
நல்லவர்கள் வெல்வது நிச்சயம் - விஜயகாந்த்
சென்னை: லோக்சபா தேர்தலில் நல்லவர்கள் வெல்வது நிச்சயம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. பிரபல தலைவர்கள் காலைமுதலே வாக்களித்து வருகின்றனர்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதா மற்றும் மகன் பிரபாகரன் உள்ளிட்டோருடன் சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.
வாக்களித்துவிட்டு வெளியே வந்த விஜயகாந்திடம் யாருக்கு ஓட்டுபோட்டீர்கள்? யாருக்கு ஆதரவாக ஓட்டு போட்டீர்கள் என்று செய்தியாளர்களிடம் கேட்டனர். அதற்கு அவர்,
அதெல்லாம் சொல்லக்கூடாது என்றார். பின்னர் அவர், நாடாளுமன்றத் தேர்தலில் நல்லவர் வெல்வது நிச்சயம்" என்று தெரிவித்தார்.
Comments
English summary
DMDK founder 'Captain' Vijayakanth after casting his vote at a polling station in Virugambakkam
Story first published: Thursday, April 24, 2014, 12:26 [IST]