கோபம் வந்தா விஜயகாந்த் நாக்கை மடிப்பார்.. சின்ன வயசுல இருந்தே அப்படித்தான்: வி.சி. சந்திரகுமார்
நெல்லை: விஜயகாந்த் நாக்கை மடித்து பேசுவது அவருடைய குணாதிசயம் என்று தேமுதிக மாநில கொள்கைபரப்பு செயலாளர் வி.சி. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் நெல்லையில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியின் மாநில கொள்கைபரப்பு செயலாளர் வி.சி. சந்திரகுமார் பிரச்சாரம் செய்தார்.
சுத்தமல்லியில் அவர் பிரச்சாரம் செய்தபோது கூறுகையில்,
நாக்கை மடித்து
தற்போது தமிழகத்தில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இது குறித்து எங்கள் தலைவர் விஜயகாந்த் சட்டசபையில் கேள்வி கேட்டால் அவர் நாக்கை மடித்து பேசுகிறார், நாகரீகம் தெரியாதவர் என்கிறார்கள்.
விஜயகாந்த்
இந்த உலகில் கோபப்படாதவர்கள் யார் தான் உண்டு. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு குணாதிசயம் உண்டு. விஜயகாந்தின் குணாதிசயம் நாக்கை மடித்து பேசுவது.
கோபம்
சிறு வயதில் இருந்தே அவருக்கு அநீதியை பார்த்தால் கோபம் வரும். தமிழக மக்களுக்கு துரோகம் செய்பவர்களை என்னவென்று கேட்டால் அவர் அதிகமாக கோபப்படுகிறார் என்கிறார்கள்.
ஜெயலலிதா
முதல்வர் ஜெயலலிதா கோபப்பட்டதே இல்லையா என்ன? இல்லை அவர் கைநீட்டி பேசியது தான் இல்லையா, தனது கட்சியினரை கண்டித்தது இல்லையா? ஆனால் அதுபோல் விஜயகாந்த் நடந்தால் மட்டும் அதை பெரிதுபடுத்துகிறார்கள். இது நியாயமா என்றார்.