For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவையில் கருத்தரிப்பு ஊசி விபரீதம்- வலிப்பு வந்து இளம்பெண் பரிதாப பலி!

Google Oneindia Tamil News

கோவை: கோவை மருத்துவமனையில் கருதரிப்பதற்காக சிகிச்சை பெற்ற வட இந்ந்திய பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் சலுவுக்சாவுத். கோவையில் தங்கநகை பட்டறை நடத்தி வருகிறார்.

இவரது மனைவி சுஜாதாசாவுத். இவர்களுக்கு திருமணமாகி 7 வருடம் ஆகியும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.

தனியார் மருத்துவமனை சிகிச்சை:

இதனால் கணவனும், மனைவியும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தொடர் சிகிச்சையின் ஒரு பகுதியாக சுஜாதா சாவுத் நேற்று மருத்துவமனைக்குச் சென்றார்.

கருத்தரிக்க ஊசி:

அங்கு அவருக்கு கருத்தரிப்பதற்கான ஊசி போடப்பட்டது. அதன் பின்னர் வீடு திரும்பினார்.

திடீர் வலிப்பு:

நள்ளிரவில் திடீரென்று சுஜாதா சாவுத்துக்கு வலிப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை அதே தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

பரிதாப உயிரிழப்பு:

அங்கு இரவு மருத்துவர்கள் இல்லாததால் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே சுஜாதா சாவுத் பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை:

இதுகுறித்து சுஜாதாவுக்கு மருத்துவம் செய்த தனியார் மருத்துவமனையின் மேல் வெரைட்டி ஹால் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் அங்கு பெரும் துயரத்தையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

English summary
North Indian wife suddenly got fits and dead due to pregnancy injection in Coimbatore. Police filed case and investigating about this incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X