மாவோயிஸ்டுகளை ஒடுக்க விமானப்படை தயார்: பி.வி.நாயர் அலகாபாத்: மாவோயிஸ்டுகளை முற்றிலுமாக அடக்கி ஒடுக்க இந்திய விமானப் படை தயார். ஆனால் அதை மத்திய அரசு தான் முடிவு செய்யவேண்டும் என்று விமானப்படை தளபதி பி.வி.நாயக் தெரிவித்துள்ளார். சர்வதேச தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொண்டு வரும் நிலையில், உள்நாட்டு பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் நக்சல் விவகாரம் மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. ஜார்க்கண்ட், ஒரிசா, பீகார், ...