ஐஐடி மாணவர்களின் அசத்தல் பிரசாரம்
சென்னை:
முன்னாள் ஐஐடி மாணவர்களால் தொடங்கப்பட்டுள்ள லோக் பரித்ரன் கட்சியின்பிரசார உத்தி மக்களிடயே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
சென்னை ஐஐடியைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் இணைந்து லோக் பரித்ரன் என்றபுதிய கட்சியைத் தொடங்கியுள்ளனர். இக்கட்சியினர் சில தொகுதிகளிலும்போட்டியிடுகின்றனர்.இக்கட்சிக்கு கோடாலி, முரசு, மோதிரம் உள்ளிட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த மாணவர்கள் தங்களது பிரசாரத்தை அறிவுப்பூர்வமாகவும், வார்த்தைஅலங்காரங்கள், வாக்குறுதி தோரணங்கள் இல்லாமலும் மிகவும் சிம்பிளாகமேற்கொண்டு வந்தனர்.
பிரசாரத்தின் நிறைவு நாளான நேற்று சென்னை நகரின் பல்வேறு தொகுதிகளிலும்இக்கட்சியின் வேட்பாளர்கள் சார்பில் ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. இதில் ஐ.ஐ.டி.மாணவர்கள் பலரும் பெருவாரியாக கலந்து கொண்டனர்.
மைலாப்பூர் தொகுதி வேட்பாளர் சந்தானகோபாலன் வாசுதேவனை ஆதரித்துகோடாலி சின்னம் பொறிக்கப்பட்ட டீ ஷர்ட்டுகள், பனியன்கள், தொப்பிகளைஅணிந்தபடி ஏராளமான பேர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
இதில் பெண்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.