For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெரம்பலூர் எம்.பி. இளவரசனை கண்டித்து அதிமுகவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

Google Oneindia Tamil News

பெரம்பலூர்: அ.தி.மு.க., எம்.பி. இளவரசனை கண்டித்து, பெரம்பலூரில் போஸ்டர் ஒட்டப்பட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இளவரசன். இவர் அ.தி.மு.க.வின் மாநிலங் களவை உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில், எம்.பி. இளவரசனுக்கு கண்டனம் தெரிவித்து பெரம்பலூர், துறைமங்கலம், பாலக்கரை, பழைய மற்றும் புது பஸ் ஸ்டாண்ட், பாடாலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

பாடாலூர் ஊராட்சிக்கும், அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படும் வகையில், அரசு புறம்போக்கு நிலத்தில் கருங்கற்களை திருடி வரும் கும்பலுக்கு, துணை போகும் மேலவை, எம்.பி. இளவரசனை வன்மையாகக் கண்டிக்கிறோம். இவண், அம்மாவின் உண்மை விசுவாசிகள். பாடாலூர் அ.தி.மு.க., மற்றும் கிராம பொதுமக்கள் என்று அச்சடிக்கப்பட்டுள்ளது..

அ.தி.மு.க.எம்.பி., குறித்து, அக் கட்சியைச் சேர்ந்தவர்களே கண்டன போஸ்டர் ஒட்டிய சம்பவம், பெரம்பலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போஸ்ட்ர் ஓட்டியவர்கள் மீது இளவரசன் விரைவில் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளாதாகவும் கூறப்படுகின்றது.

English summary
Tension prevailed as cadres of AIADMK in Perambalur allegedly stuck posters against the ADMK MP Elavarasan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X