For Daily Alerts
Just In
மோடியை விமர்சிப்பவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடிப்போங்க.. பீகார் பாஜக தலைவர் மிரட்டலால் சர்ச்சை
பாட்னா: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை விமர்சிப்பவர்கள் பாகிஸ்தானுக்கு போய்விட வேண்டியதுதான் என்று பீகார் மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான கிரிராஜ்சிங் எச்சரிக்கை விடுத்திருப்பது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் கோடாவில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பேசிய கிரிராஜ் சிங் கூறியதாவது:
பாரதிய ஜனதா கட்சியின் பிரமர் வேட்பாளர் நரேந்திரமோடிக்கு தடையை ஏற்படுத்த வேண்டும் என்று சிலர் நினைக்கின்றனர். அப்படி நினைப்பவர்கள் பாகிஸ்தானுக்குத்தான் போகலாம்.
வருங்காலத்தில் அவர்களுக்கு இந்தியாவில் இடம் இருக்காது. பாகிஸ்தானில் மட்டுமே இடம் இருக்கும்.
இவ்வாறு கிரிராஜ்சிங் பேசினார்.
அவரது சர்சைக்குரிய இந்த பேச்சுக்கு காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
lok sabha election 2014 modi bjp giriraj singh pakistan லோக்சபா தேர்தல் 2014 மோடி பாஜக கிரிராஜ்சிங் பாகிஸ்தான்
English summary
In remarks that are bound to create a big political storm, a BJP leader from Bihar suggested at a rally today that those who oppose his party's prime ministerial candidate Narendra Modi will have "no place in India" after the results of the general election are announced.
Story first published: Saturday, April 19, 2014, 16:58 [IST]